தளம்
மலையகம்

13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள்.!

முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று(ஞாயிற்றுக்கிழம) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்த குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி முக்கிய ஆவணம் ஒன்றினை வெளியிடவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள பதிவு!

Fourudeen Ibransa
2 years ago

மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன், ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

Fourudeen Ibransa
3 years ago

உத்தேச தேர்தல் முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. .!

Fourudeen Ibransa
3 years ago