தளம்
இன்றைய நிகழ்வுகள்

IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee), பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde-Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் இதில் அடங்குவர்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

பருவநிலை மாற்றத்தால் பேரழிவு தொடங்கி விட்டதா?

Fourudeen Ibransa
3 years ago

இலங்கை எதிர்கொண்டுள்ள உடனடி நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடல் .!

Fourudeen Ibransa
2 years ago

பாடகி யொஹானிக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காணி

Fourudeen Ibransa
2 years ago