தளம்
சிறப்புச் செய்திகள்

எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்டுக்காக சவாலை ரணில் ஏற்றுள்ளார். .!

” நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், பிசாசு பிரதமராக இருந்தால்கூட ஆதரவு வழங்கியாக வேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரணிலின் அரசியல் கொள்கையுடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவருக்கு சர்வதேச தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை பயன்படுத்தி நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படுமானால், எரிபொருள் வழங்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இந்த வேலையை ஒரு பேய் செய்தால்கூட ஆதரவு வழங்க வேண்டும்.

எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்டுக்காக சவாலை ரணில் ஏற்றுள்ளார். அதனை வரவேற்க வேண்டும். ” – என்றார்.

Related posts

ஜனவரி மாதம் வரை மட்டுமே எரிபொருளுக்கு உத்தரவாதம் .!

Fourudeen Ibransa
3 years ago

மரக்கறிகளின் விலை இன்று 20 வீதத்தால் வீழ்ச்சி .!

Fourudeen Ibransa
2 years ago

‘5 நாடுகளுடன் ரணில் பேச்சு’

Fourudeen Ibransa
2 years ago