தளம்
வட மாகாணம்

பிரதமரான ரணிலுக்கு சி.வி .விக்னேஸ்வரன் ஆதரவு.!

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பிரதமரை நியமித்தார்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.

‘எங்கள் கட்சியில் நான் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர். இந்த நிலையில் நாட்டின் மற்றும் மக்களின் நலன் கருதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன் என விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரானவிக்னேஸ்வரன் எம்.பி ரணில் அரசாங்க அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

யாழ்தேவி தடம்புரண்டது- வடக்கு ரயில் சேவைகள் ரத்து..!

Fourudeen Ibransa
1 year ago

வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர்….!

Fourudeen Ibransa
1 year ago

இலங்கையில் இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும்..!

Fourudeen Ibransa
2 years ago