தளம்
சிறப்புச் செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் .!

இலங்கையில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதாக தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று (27) வழங்கப்பட்டன. 

கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா.!

Fourudeen Ibransa
2 years ago

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

Fourudeen Ibransa
3 years ago

இந்திய கடன் திட்டத்தின் 100 மில்லியன் டாலர்கள் சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளுக்கு!

Fourudeen Ibransa
2 years ago