தளம்
இலங்கை

கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தும் வர்த்தமானி தயார்?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர், இதனை உறுதிப்படுத்தினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினால், சம்பளம் நிர்ணயிக்கப்பட்டமையினாலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும், இந்த வர்த்தமானி வெளியானதன் பின்னர் ரத்தாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

இலங்கை – சீன நட்புறவு உள்நாட்டு ரீதியிலும், பிராந்திய ரீதியிலும், பூகோள ரீதியிலும் முன்னெப்போதையையும் விட இன்று அதிக முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது.

Fourudeen Ibransa
2 years ago

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago

சிங்கப்பூர் வழியாக அமெரிக்கா செல்ல கோட்டா தயார் நிலை.!

Fourudeen Ibransa
2 years ago