தளம்
இலங்கை

திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை.!

திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(3)மாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மஹதிவுல்வெவ-01ம் கண்டத்தில் வசித்து வரும் டபிள்யூ.எம்.வசந்த திசாநாயக்க (35வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப். முபாரக்

Related posts

சம்மாந்துறை உப பஸ் டிப்போ விவகாரம்: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?

Fourudeen Ibransa
3 years ago

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்:

Fourudeen Ibransa
3 years ago

நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு.!

Fourudeen Ibransa
3 years ago