அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’வின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனினும், 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள காகம் (பஸில்) நடவடிக்கை எடுக்குமா என்ற ஐயம் எமக்கு உள்ளது. எனவே, அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வராமல் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம் எனவும் கம்மன்பில கூறினார்.

22 தோற்குமானால் அது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.