நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக செலவிடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு

காலி(Galle) மாவட்டத்தில் தரம் 7 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக காலி மாவட்ட சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.