தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுவதாலே சிலர் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதுபோன்று இங்கு யாரும் வெளியேற்றப்படவில்லை. டயஸ்போரா என்பது இங்கு பொருந்தாது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகங்களுடன் தேவையான கலந்துரையாடல்களை அரசு செய்து வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நாட்டை துண்டாடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. யாராவது எந்த நாட்டில் இருந்தாவது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களையும் நாட்டை துண்டாடுவதற்கு ஊக்கம் அளிப்பவர்களையும் அரசாங்கம் தடை செய்யும்.

அவர்களுடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது. வெளிநாடுகளில் வாழ்வதற்காக அன்றி இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாலே அவர்கள் தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.” என்றுள்ளார்.