நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றுமொரு வழக்கிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.