மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்கவின் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அவரை, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுரகுமார திசாநாயக்க எம்.பி பயணித்த கெப்ரக வாகனமும் எதிரேவந்த டிப்பர் ரக வாகனமும் இரத்தினபுரி- ஹொரணை வீதியில் கிரியுல்ல எனுமிடத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்றுவிபத்துக்குள்ளானது இதில் அனுரகுமார திசாநாயக்க எம்.பி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிறு காயமடைந்த சாரதி, இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.