புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. எதிர்வரும் 19ஆம் திகதி கூட் டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் முடிவு எடுக்கும். – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச் சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதிப் பதவிக்கு மும்முனைப்போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க, சஜித்பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும ஆகிய மூவரும் போட்டியிடத் தயாராகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு யாரை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது எனச் சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 19ஆம் திகதிதான் வேட்புமனுத் தாக்கல்இடம்பெறவுள்ளது. அன்றுதான்புதியஜனாதிபதித் தெரிவுக்காக யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எனவே, 19ஆம்திகதி வேட்புமனுத் தாக்கலின் பின்னர்அன்றைய தினமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடிஎந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் முடிவு எடுப்போம். அதுவரைக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும்நாடாளுமன்றத்திலுள்ள பிரதான கட்சிக ளுடனும் பேச்சுக்கள் தொடரும் – என்றார்.