இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இலங்கை வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்து,வங்கியை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தின் பின்னர் தீர்வு கிடைக்காவிடின் பாரிய போராட்டம் வெடிக்கும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.