இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட HIV தொற்றாளர்களில், இளம் பௌத்த பிக்குகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென, தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் HIV தொற்றாளர்களில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் என தெரியவருகின்றது.

நாட்டில் கடந்த 9 மாதங்களில் 342 எயிட்ஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.