‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி நடந்தது. திருமணமாகி 4 மாதம் சென்ற நிலையில், கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி டுவிட்டரில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி, குழந்தைகளின் பாதங்களை கைகளால் வருடி முத்தமிடும் படங்களையும் வெளியிட்டிருந்தனர். ‘அதெப்படி… திருமணமான 4 மாதங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?’ என்று அனைவருமே குழப்பம் அடைந்து போனார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி நடந்தது. திருமணமாகி 4 மாதம் சென்ற நிலையில், கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி டுவிட்டரில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி, குழந்தைகளின் பாதங்களை கைகளால் வருடி முத்தமிடும் படங்களையும் வெளியிட்டிருந்தனர். ‘அதெப்படி… திருமணமான 4 மாதங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?’ என்று அனைவருமே குழப்பம் அடைந்து போனார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்ட விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் மூலம் கடந்த 13-ந் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் மூலமாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும், வாடகை தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உயர்மட்ட குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இருவரும் விதிகளை மீறவில்லை என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் நிலவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வெளியான உயர்மட்ட குழுவின் அறிக்கை விவரம் வருமாறு:-

  • இந்த விசாரணையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ஐ.சி.எம்.ஆர்.) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது.
  • ஐ.சி.எம்.ஆர்.-ன் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவின்படி வாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
  • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி பதிவு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  • ஐ.சி.எம்.ஆர்.-ன் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவின்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாடகை தாய் ஒப்பந்தம்
  • தனியார் ஆஸ்பத்திரியில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை விசாரித்தபோது 2020-ம் ஆண்டில் அவர்களது குடும்ப டாக்டரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப டாக்டரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை என்றும், மேலும் விசாரணையில் அந்த டாக்டர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரியவருவதால் அந்த குடும்ப டாக்டரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.
  • சினைமுட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் ஆஸ்பத்திரியால் முறையாக பராமரிக்கப்படவில்லை.
  • கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சினைமுட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் ஆஸ்பத்திரியில் சேமித்து வைக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதத்தில் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
  • செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகை தாயாக செயல்படவும், அவசிய செலவுக்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. அறுவை சிகிச்சை விசாரணையில் வாடகை தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை இந்த விசாரணையில் தனியார் ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு முறைகளின்படி, ஆஸ்பத்திரியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்படவில்லை.

எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் ஆஸ்பத்திரியின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது? என்று ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.