ஒலுவில் ஷம்ஸ் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலி பிறை எப் .எம். அறிப்பாளரும் ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் எழுதிய ஜந்து நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா பரன் தோட்டத்தில் இடம் பெற்றது தென்கிழக்குப்பல்கலைக்கழக சமூகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் தலைமையில் இடம் பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் இலக்கிய அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்
கெளரவ அதிதிகளாக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எ .எப்.எம். அஷ்ரப் , பிறை எப் எம் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் ஹகயூம் ,
U.K.அப்துர் ரஹீம்( Naleemi)

நூல் மீதான உரையை உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் அவர்கள் நிகழ்த்தினார்.
ஓய்வு நிலைப்போராசிரியர் S.யோகராசா , உலகக்கவிஞர் சோலைக்களி அதீக் உட்பட பல எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மக்கள் என பலர் இவ் . நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.