ஒக்டோபர் மாதம் முழுவதும் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச பயணிகளை நாடு வரவேற்றுள்ள நிலையில், ஒக்டோபர் 1 முதல் 31 வரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்து 62 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, ஜனவரி முதல் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 258ஆக பதிவாகியுள்ளது.