யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின் பகுதியில் பின்னால் , மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.