வல்வெட்டித்துறை – கொற்றாவத்தை பகுதியில் வீட்டில் யாருமில்லாத பகல் வேளை கடந்த 21ம் திகதி 21 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டதாக பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய உடுப்பிட்டி நாவலடியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபரையும் களவாடப்பட்ட 35 லட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் வல்வெட்டித்துறை பொலிசார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதுமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.