தேர்தலில் வெற்றி பெற்ற ஹிட்லருக்கு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து இராஜினாமா கடிதத்தை கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் தற்போது முகவரியின்றி தேர்தலில் தோல்வியடைந்த ஹிட்லராக இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே டிலான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். “இருப்பினும், ஹிட்லர் எப்படி இறந்தார் என்பதை இவர்கள் அனைவரும் அறிய விரும்புகிறார்கள். அடால்ஃப் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்,” என்று அவர் கூறினார்.