கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தலைத் திருடிக் கொண்டு சென்று, பிரபல  பாடசாலை  மாணவன்  ஒருவன்  தனது நண்பர்களுடன் குடித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த மாணவனின் மாமன் கனடாவிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வந்து மாணவனின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

போதையில் மாணவர்கள்

குறித்த  நபர்  கனடாவில் இருந்து வரும் போது   மதுபானப் போத்தல்களையும் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில்  அப் போத்தல்களில் ஒன்றை குறித்த மாணவன் நல்லுார் தேர்த்திருவிழா அன்று எடுத்துச் சென்று அரியாலைப் பகுதியில் உள்ள தனது நண்பனின் தந்தையின் தொழில் பட்டறை ஒன்றில் வைத்து தனது பாடசாலை நண்பர்களான 3 பேருடன் குடித்துள்ளனர்.

மாணவர்கள்  அதனை  குடித்து சில நிமிடங்களிலேயே போதை தலைக்கேறி கத்திக் குளறியதுடன் வாந்தியும் எடுத்து அல்லோலகப்பட்டுள்ளனர்.

கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்! | Students Of Jaffna Intoxicated By Canada Mama

தொழில்பட்டறைக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது 4 பேரும் நிலத்தில் புரண்டு கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து  பட்டறையின் சொந்தக்காரனான மாணவன் ஒருவரின் தந்தைக்கு  தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்து வந்த தந்தை தனது வாகனத்தில் அவர்களை துாக்கிப் போட்டுக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இதே வேளை மாணவர்கள் நிறைவெறியில் உருண்டு புரண்ட காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரிவித்து குறித்த மாணவகளின் தந்தைகளில் இருவர் அவரது வீட்டுக்குச் சென்று முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.