இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக அவரின் இல்லத்திற்கு வருகைத்தந்து அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.