அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றியமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் மல்கம் கர்தினால் கர்தினால் மற்றும் வண.எல்லே குணவன்ச தேரர் சார்பாக அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களையும் அமைச்சரவையின் தலைவர் நீக்க வேண்டும் என்றும் கூறிய அவர், ஆனால் இதுவரையில் அது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்