இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு நீதி அமைச்சில் நடைபெற்ற வைபம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நாட்டில் அரசியல் பரப்பில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப் போவதாகவும், அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் பரவலாக செய்திகளின் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த நிலையில் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படப் போவதாக வெளியான செய்திகளை இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.