முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (11) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொட்டலங்க அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அன்று இந்த விடயங்களை இழுக்காததன் பின்விளைவுகள் இன்றும் உணரப்படுவதாகவும், வெள்ளை ஆடை அணிந்து அரசியலில் ஈடுபட முயற்சிப்பவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவும் கருணாநாயக்க தெரிவித்தார்.