” ஜனாதிபதி பதவி விலக தயார் என நான் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்துவிட்டார்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 113 பேரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க ஜனாதிபதி தயார் என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். எனவே, 113 ஐ நிரூபித்து ஆட்சியை பொறுப்பெடுங்கள். மாறாக ஜனாதிபதி பதவி விலகுவார் என நான் கூறவில்லை. ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தில் கோரமுடியாது.” – என்றார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,

” நான் பொய்யுரைக்கவில்லை. நீங்கள் சொல்வதுதான் பொய். எனது கருத்தை மீளப்பெறமாட்டேன்.” – என்றார்.