தமிழில் டாக்டர் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தன்னை நடிகையாக திரையுலகில் கால்பதித்து அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை பிரியங்கா மோகன். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வந்த தடமும் போன இடம் தெரியாமல் போனது.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தற்போது ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக இருக்கும் இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு ஆசாமி. அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனாலேயே இவர் கிட்டத்தட்ட 30 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். இவருடைய சமூக வலைதள கணக்குகளை நிர்வகிப்பது நடிகர் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் நடத்திவரும் ரூட் என்ற நிறுவனம்தான்.

இந்நிலையில், தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ள பிரியங்கா மோகன். இந்த வெப்சீரிஸ் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாந்து சீரழியும் இளம் பெண்கள் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது.

8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. சினிமாவில் கூட நீச்சல் உடையில் நடிக்காத நடிகை பிரியங்கா மோகன் வெப்சீரிஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால் இந்த வெப்சீரிஸ் குறித்தும் இதில் பிரியங்கா மோகன் நீச்சல் உடையில் நடிக்கிறார் என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.