திருகோணமலை அன்புவழிபுரத்தில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.