நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிம்மினி ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக க்தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி லிம்மினி ராஜபக்ஷ இன்று (08) காலை  சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக  கூறப்படுகின்றது.

 லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன .

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராகபாரிய ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.