ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான திட்டங்களை தனக்கு நெருங்கியவர்களிடம் கோட்டாபய ராஜபக்ஷ  அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.