பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை  பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அங்கு தீவிர பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர்  அலுவலகம் முன்பாக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது. விமானத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.