நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்குகூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அங்கு சபாநாயகரின் இல்லாம் அமைந்துள்ளமையினால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகரின் இல்லத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சபாநாயகரின் வீடும் முற்றுகையிட வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.