மாலைத்தீவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்குள்ள மக்களும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக வெளியேற்றுமாறும் அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்‌ச, ஐக்கிய அரபு எமிரேட்சின் வீசா அனுமதி கிடைக்கும் வரைக்கும் தற்காலிகமாக தஞ்சம் வழங்குமாறு கோரி சிங்கப்பூருக்கு  செல்லவுள்ளதாக மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.