ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று முதல் தமது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்தார். 

இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பதற்கான கேள்வி எழுந்துள்ள நிலையில்,  

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பிற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, பிரதமர் பதவிக்கு சர்வகட்சி கூட்டத்தில் சஜித்தின் பெயர் தெரிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த சர்வ கட்சி கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி, மற்றும் பிரதமரை தெரிவு செய்யும் பாராளுமன்ற வாக்கெடுப்பு 20ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.