காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற சில மணித்தியாலங்களுக்கு வெளியான இந்த உத்தரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணிலின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.