ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்களிப்பின் போது பாராளுமன்றத்தில் சமந் பிரிய ஹேரத், சேலைன் போத்தலுடன் சபைக்குள் வந்திருந்தார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும், வாக்களிக்க வந்திருந்தார்.

அவருடைய பெயர், அட்டவணையில் 223 ஆவதாக இருக்கின்றது. எனினும், இடைநடுவிலேயே அவருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருக்கின்றனவா என தெரிவத்தாட்சி அதிகாரியான பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் கேட்டார்.

எனினும். எதிர்ப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

சேலைன் போத்தலை, உதவியாளர் ஒருவர் ஏந்தி பிடித்துக்கொள்ள. அவர், வாக்களித்துவிட்டு சபையை விட்டு வெளியேறி சென்றார்.