எரிபொருளின் விலைகளில் மீண்டும் நாளை நள்ளிரவிலிருந்து
மாற்றங்கள் எற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, 50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விலை குறைப்பானது நாளை (1) நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சிக்கு அமைய, இலங்கையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவுள்ளதாகவும் எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன