இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்