பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 9 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா | Situation For Women Who Travel By Bus In Jaffna

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை சந்தேக நபர் அபகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.