டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டோரிக்கு 62 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 31 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.