(யூஎல்எம். பஸீல் Independent media wach)
அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வழிகாட்டலில் றுஹுணு லங்கா நிறுவனமானது “முஸ்லிம் விவாக/ விவாகரத்து சட்டம் தொடர்பான கலந்துரையாடல்” ஒன்றை அதன் தலைவர் MS.ஜௌபர் தலைமையில் இன்று (24/10/2022) அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் நடாத்தியது.

இந்நிகழ்வில்

.வளவாளர்களாக…
சிரேஷ்ட சட்டத்தரணி MM.பஹீஜ்,
மேலதிக மாவட்ட பதிவாளர் SA. நஸீர்டீன் மற்றும்

.அதிதிகளாக….
சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனிபா சேர்,
அட்டாளச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸாபிர்,
அட்டாளைச்சேனை ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி MS. ஜுனைடீன் மற்றும்

.பங்குபற்றுனர்களாக….
அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து மேலதிக மாவட்ட பதிவாளர்கள்,
அக்கரைப்பற்று அட்டாளச்சேனை போன்றவற்றில் கடமை புரியும் விவாகப் பதிவாளர்கள்,
உலமாக்கள், புத்திஜீவிகள் போன்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை மேற்கொண்டனர்.