தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ,புதிய அரசியலமைப்பை ஜனாதிபதி சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ,புதிய அரசியலமைப்பை ஜனாதிபதி சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
பொது மன்னிப்பின் அடிப்படையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அதற்கு அரசுக்கு நன்றிகள்.சிறையில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இனப் பிரச்சினைக்கான தீர்வை,புதிய அரசியல் அமைப்பின் மூலம்,ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றித் தருவதாக ஜனாதிபதி தற்போது தெரிவித்துள்ளார்.இதனை நாம் வரவேற்கிறோம்.இதற்கான ஆதரவை நாம் தருவோம்.
2016 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,அன்று பிரதமராக இருந்தார்.அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்த இனப்பிரச்சினை தொடர்பாக நாம் அவரோடு கலந்துரையாடி வருகின்றோம்.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் அமைப்பு வரைபு, நிபுணர்களின் வழிகாட்டலோடு வந்தது. அது நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.ஆகவே காலம் தாழ்த்தாமல் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.ஒரு வருடம் கூட தேவையில்லை.தமிழ் மக்களின் அபிலாஷைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்றார்.