பிரதமர் அலுவலகத்தினால் இன்று (03) காலை விஷேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களை வன்மையாக நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.