உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் ரிஷாட் பதியூதீன் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.