கோட்டாபய ராஜபக்ச வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமை காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

அத்துடன் பொருளாதாரம் தொடர்பிலான முறையான ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாமையும் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். இதன் ஒட்டுமொத்த பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவுவதிலிருந்து அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பின்வாங்கிக்கொண்டன.

ஆகையினால் தவறுகளை உணர்ந்து நாங்கள் மீளெழுவதற்கான சந்தர்ப்பத்தை இனங்காண வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.