கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.