நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கும் நிலையில் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு விற்பனையாளர்களிடம் போதிய அளவான சிலிண்டர்கள் கைவசம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலான விநியோகஸ்தர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனையாளர்களுக்கு கடனுக்கு வழங்குவதில்லை என்றும் பணம் கொடுத்தால் மாத்திரமே சிலிண்டர்களை வழங்குவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறு விற்பனையாளர்கள் பலர் எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிரமப்படும் காரணத்தினால் அவர்களுக்கு கடன் வசதியில் எரிவாயுவை வழங்குமாறு விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.