பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றதில் இன்று ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறும் அவர் கோரினார்.

எனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான், ஆவணங்களுடன் பதிலளிக்கின்றேன். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.