இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் நேற்று மாலை யாழ்.மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோருடன் அவர் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்து அங்கு கல்வி வாய்ப்பு வழங்கமுடியும் எனவும் தெரிவித்ததாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்தார்.